ஓர் அறிவிப்பு
தங்களுக்கு
அனுப்பியிருந்த தகவலைத்
தொடர்ந்து நடைபெற்ற
திருப்பணிக்
குழு பொறுப்பாளர்கள்
கூட்டத்தில் சர்வ சாதகம்
சிவாச்சார்யார்
ஸ்ரீ தகட்டூர் ஞானசேகர
சிவம் அவர்களிடமிருந்து
பெறப்பட்ட கும்பாபிஷேக
நிகழ்ச்சி நிரல் பற்றி
பேசப்பட்டு உறுதி
செய்யப்பட்டது.
அதன்படி, கும்பாபிஷேகத்துக்கு
முன்னதாக, வெள்ளி (27-01-2012) &
சனிக்கிழமை
(28-01-2012) ஆகிய இரு தினங்களிலும்
காலை, மாலை இரு
வேளைகளிலும் மொத்தம்
நான்கு கால யாக சாலை பூஜைகள்
நடைபெறும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே வைபவத்திற்கு
வர திட்டமிட்டுருப்பவர்கள்
தங்கள் சௌகரியப்படி அவசியமான
பிரயாண
முன்பதிவு
ஏற்பாடுகளை செய்துவிட்டு
ஏற்கனவே கேட்டுக்கொண்ட
விபரங்களை
திருப்பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு
தெரிவிக்குமாறு
பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்களுக்குத் தேவையான
வசதிகளை ஏற்பாடு
செய்வதற்கு இது எமக்கு
உதவியாக இருக்கும்.
தவிர, கும்பாபிஷேகத்தின்
பல்வேறு பணிகளுக்கு பொறுப்பேற்று
தொண்டு
செய்ய
ஸ்ரீ காமாக்ஷி பக்தர்கள்
(volunteers) தேவையாய் உள்ளது. இந்த
பிரத்தியேக
குழுவில் சேர விருப்பமுள்ள
பக்தர்கள் செயலாளர் ஸ்ரீ
K.S.வெங்கட்ராமன்
அவர்களுடன் போன் அல்லது
மின் தகவல் (Email)
மூலம் தொடர்பு கொள்ளவும்.
மேலும்
மஹா கும்பாபிஷேகத்தின்
பல்வேறு செலவினங்களை
தனிப்பட்ட
முறையில் ஏற்று உதவ
விருப்பமுள்ள ஸ்ரீ காமாக்ஷி
பக்தர்கள் குடும்பம்
அல்லது குழு
மேற் குறுப்பிட்ட செயலாளருடன்
தொடர்பு கொள்ளுமாறு
பணிவன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மஹா
கும்பாபிஷேக விழா மலர்
சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு
வருகிறது. இதில்
சேர்ப்பதிற்கு பக்தர்கள்
தாங்களோ அல்லது தங்கள்
மூலமாகவோ விளம்பரங்களை
பெற்று உதவலாம். விபரங்களுக்கு
K.R.வெங்கடராமன்,
பொருளாளருடன் தொடர்புகொள்ளவும்.
எஞ்சி
இருக்கும் ஆலய திருப்பணிகள்
அனைத்தும் விரைவிலேயே
இனிது
நிறைவேறி
பக்தர்களால் அர்ப்பணித்து,
சமர்ப்பிக்கப்படும்
எழில் மிகு
புத்தம்புது ஆலயத்தில்
ஸ்ரீ காமாக்ஷி அம்மன்
பொலிவுடன் கொலுவீற்று
அருளாசி வழங்கும்
நன்னாளை இனிதே வரவேற்போம்.
கும்பாபிஷேக விழா
வெற்றிகரமாக நடந்தேற
அனைவரும் ஸ்ரீ காமாக்ஷியின்
அருளாசியை பிரார்த்திப்போம்.
தங்கள் ஒத்துழைப்புக்கு
மிக்க நன்றி!
K.B.S.S. திருப்பணிக் குழு,
சென்னை
கைபேசி
: (0) 9444398147 , (0)9444015546, (0) 9381330019